கிம் மோ மாடி வீட்டுக்கடியில் தாயும் சேயும் மரணம்

கிம் மோ லிங்க் வீவக அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் 34 வயது மாது ஒருவரும் 3 வார கைக்குழந்தையும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று இறந்த நிலையில் காணப்பட்டனர்.

காலை 11.15 மணியளவில் தங்களுக்கு அதுபற்றிய விவரம் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர் என்று உறுதிசெய்தனர்.

அந்த வழியே சென்ற திரு சென் என்ற வழிப்போக்கர் கொடுத்த அவசரத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ஆரம்பக் கட்ட விசாரணையில் குற்றச் செயல்கள் நடந்துள்ளதற்கான அறிகுறிகள் இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

இம்மாதத்தில் நடந்துள்ள 2வது தாய்சேய் மரணச் சம்பவம் இதுவாகும். யூனோஸ் வட்டாரத்தில் கடந்த நவம்பர் 5 அன்று 33 வயது மாதும் ஒரு வயது குழந்தையும் வீவக வீட்டின் கீழ்தளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!