பணத்தைப் பறிகொடுத்ததாகப் பொய் கூறிய மாதிற்கு அபராதம்

காவல்துறையினரிடம் பொய்ப் புகார் அளித்த குற்றத்திற்காக 35 வயது ஜாய்ஸ் டான் ஹ்வீ லெங்கிற்கு வியாழக்கிழமை $2000 அபராதம் விதிக்கப்பட்டது.

தன்னிடம் இருந்து $6,700 பணத்தை இருவர் திருடிவிட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை அதிகாரிகளுக்குத் தவறான தகவல் அளித்ததாக சுமத்தப்பட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

வேலையிடத்தில் சக ஊழியர் ஒருவருடன் நல்லுறவைத் தக்கவைத்துக்கொள்ள நினைத்தார் டான்.

அதனால், இந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அந்த ஆடவர் தன்னிடம் கடனாகக் கேட்ட $6,700 பணத்தைத் தர ஒப்புக்கொண்டார்.

உண்மையில் அவ்வாறு பணம் தருவதில் டானுக்கு விருப்பமில்லை.

மார்ச் 16ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் அந்த ஆடவரைக் கைத்தொலைபேசியில் அழைத்த டான், பணத்தைத் தனது வீட்டிற்கு அருகில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.

ஆடவரோ அடுத்த நாள் பணத்தை வேலையிடத்தில் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அன்றிரவு 10.20 மணியளவில் காவல்துறையை அழைத்த டான், ஈசூன் ஸ்திரீட் 51இன் புளோக் 504சிக்கு அருகே புகைப்பிடித்தபோது ஆடவர் இருவர் தன்னிடமிருந்து பணத்தைத் திருடிவிட்டதாகப் புகார் அளித்தார்.

கத்தி முனையில் அவர்கள் திருடியதாகவும் கூறியிருந்தார்.

காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தான் பொய்யுரைத்ததை டான் ஒப்புக்கொண்டார்.

வேலையிட நண்பருக்குப் பணம்தர விருப்பமில்லாததால் அவ்வாறு நடந்துகொண்டதாக அவர் காவல்துறையிடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!