சிங்க‌ப்பூர்

ஆயர் ராஜா விரைவுச்சாலையின் நடுவே, ஆடவர் ஒருவர் மே 25ஆம் தேதி உட்கார்ந்திருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று ‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ தளத்தில் பகிரப்பட்டது.
விலங்கு நல ஆய்வு, கல்விச் சங்கத்தின் (ஏக்கர்ஸ்) வனவிலங்கு மீட்பு நிலையம், தனக்கு ஒதுக்கப்பட்ட 2 ஹெக்டர் நிலத்தில் கால்வாசிப் பகுதியை மட்டுமே 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களில் ஏறக்குறைய 6,500 பேருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (மே 24) பிழையான மின்னஞ்சல் ஒன்று தேர்தல் துறையால் அனுப்பப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் மீண்டும் மின்சைக்கிள் தீப்பற்றி எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீடோக்கில் உள்ள வீவக புளோக்கின் 5வது மாடியில் மின்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சுவர், தாழ்வாரம் என சுற்றிலும் உள்ள பகுதி கருகி, கறுப்பு நிறமாக மாறியது.
உயிர் தப்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்றும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவர பல மாதங்கள் அல்லது ஆண்டுகளும் ஆகலாம் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.