ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் நடால்

மெல்பர்ன்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ரஃபாயல் நடால் பங்கேற்பார் என்று அத்தொடரின் இயக்குநர் கிரெய்க் டிலீ தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது இடுப்பில் காயமடைந்தார் நடால். அதன்பின் அவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐந்து மாதங்களுக்கு விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, 2024 ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் நடால் விளையாட இருப்பதாக டிலீ தெரிவித்தார்.

இதனிடையே, 2024ஆம் ஆண்டுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து தான் ஓய்வுபெறலாம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார் 38 வயதான நடால்.

ஆஸ்திரேலியப் பொது விருதில் இரண்டு முறை உட்பட மொத்தம் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!