உலகக் கிண்ணக் காற்பந்துப்
போட்டிகளுக்கு தென்கிழக்கு ஆசிய நாடு எதுவும் தகுதிபெறவில்லை. ஆனால், இவ்வண்டு நவம்பர் 21லிருந்து டிசம்பர் 18வரை நடைபெறும் அந்தப் போட்டிகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்.
அவர்தான் முகம்மது தாக்கி (படம்) என்பவர்.
இவர் அந்தக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் 129 நடுவர்களில் ஒருவர். இவர் காணொளி நடுவர்களில் ஒருவராக செயல்
படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியானிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே நடுவராக தேர்வு ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.