கட்டை விரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் செளத்தி

ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி, வியாழக்கிழமையன்று தனது கட்டை விரலுக்கு அறுவை சிக்கை மேற்கொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சௌத்தி பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமையன்று நியூசிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் செளத்தியின் கட்டை விரல் எலும்பு முறிந்தது. அவர் பந்தைப் பிடிக்கச் சென்றபோது அவ்வாறு நேர்ந்தது.

உலகக் கிண்ணப் போட்டியில் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று நடைபெறவுள்ள தங்களின் முதல் ஆட்டத்தில் இந்தியாவைச் சந்திக்கவுள்ளது நியூசிலாந்து. செளத்தி அந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டெட் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!