ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி, வியாழக்கிழமையன்று தனது கட்டை விரலுக்கு அறுவை சிக்கை மேற்கொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் சௌத்தி பங்கேற்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமையன்று நியூசிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் செளத்தியின் கட்டை விரல் எலும்பு முறிந்தது. அவர் பந்தைப் பிடிக்கச் சென்றபோது அவ்வாறு நேர்ந்தது.
உலகக் கிண்ணப் போட்டியில் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று நடைபெறவுள்ள தங்களின் முதல் ஆட்டத்தில் இந்தியாவைச் சந்திக்கவுள்ளது நியூசிலாந்து. செளத்தி அந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டெட் கூறினார்.