காற்பந்து: முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கும் ஸ்பர்ஸ்

லண்டன்: இந்தப் பருவத்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழுவின் வெற்றி நடை தொடர்கிறது.

கிறிஸ்ட்டல் பேலஸ் குழுவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அது வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் கிறிஸ்ட்டல் பேலஸ் வீரர் ஜோயல் வார்ட் தவறுதலாக தன் அணிக்கு எதிராகவே கோல் அடித்தார். அதன் பின்னர் 66வது நிமிடத்தில் அணித் தலைவர் சன் ஹூங் மின் ஸ்பர்சுக்கு இரண்டாவது கோலை அடித்தார்.

இந்தப் பருவத்தில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்பர்ஸ் எட்டு ஆட்டங்களில் வெற்றியும் 2 ஆட்டத்தில் சமநிலையும் கண்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணிக்கு மான்செஸ்டர் சிட்டியும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் மோதுகின்றன.

இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும்.

கடந்த ஜூன் மாதம் எஃப் கிண்ணத்தில் இரு அணிகளும் மோதின. அதில் சிட்டி 2 -1 என்று வெற்றிபெற்றது.

சனிக்கிழமை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி (21), மூன்றாவது இடத்தில் ஆர்சனலும் (21) உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!