முழுகவனமும் கோப்பா அமெரிக்காவில் தான் உள்ளது: மெஸ்ஸி

போனஸ் ஏரிஸ்: தன்னுடைய முழுகவனமும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை தக்கவைத்துகொள்வதில் தான் இருக்கிறது என்று அர்ஜென்டினா காற்பந்து அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கு பிறகு அனைத்துலக காற்பந்து ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடந்த 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டி தான் தமது கடைசி உலகக் கிண்ணப் போட்டி என்று கூறியிருந்தார் 36 வயது மெஸ்ஸி.

இந்நிலையில் 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவில் நடக்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் தான் விளையாடக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

“என்னால் தொடர்ந்து நன்கு விளையாட முடிந்து, அணிக்கு பலமாக இருந்தால் அனைத்துலக காற்பந்து ஆட்டங்களில் பங்கேற்பேன், தற்போது கவனம் முழுவதும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தில் தான் உள்ளது,” என்றார் மெஸ்ஸி.

2021ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த கோப்பா அமெரிக்கா கிண்ணப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றது. 2024ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கிண்ணப்போட்டி அமெரிக்காவில் ஜூன் மாதம் நடக்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!