நம்பிக்கை அளிக்கும் ஜடேஜா

தர்மசாலா: உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நெருங்கியுள்ள நிலையில், ‘ஆல்ரவுண்டர்’ ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வெல்ல முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் ஜடேஜா.

சென்னை அணியில் அதிகபட்சமாக 43 ஓட்டங்களைக் குவித்த ஜடேஜா, பந்துவீச்சிலும் மிளிர்ந்தார். அவர் பஞ்சாப் அணி வீரர்கள் மூவரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனையடுத்து, அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முதலில் பந்தடித்த சென்னை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களை எடுத்தது.

பஞ்சாப் அணி அந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்குமுன் அவ்விரு அணிகள் மோதிய ஐந்து முறையும் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றிருந்தது.

ஆனால், சென்னை அணியின் பந்துவீச்சில் நிலைகுலைந்த பஞ்சாப் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், அவ்வணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றுப்போனது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் சென்னை அணி மூன்றாம் இடத்திலும் பஞ்சாப் அணி எட்டாம் இடத்திலும் இருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!