கோவை: தமிழக மக்களைக் கதிகலங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தொடர்பில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக நிர்வாகி உள்ளிட்ட மேலும் மூவரை சிபிஐ போலிசார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சி யைச் சேர்ந்த கும்பல் ஒன்று பணம், அதிகார மிடுக்கோடு ஊரிலிருந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட இளம்பெண் களுக்கு வலை விரித்தது.
அவர்களது ஆசை வார்த்தையில் விழுந்த பெண்களை பண்ணை வீடுகளுக்கு வரவழைத்து, அங்கு அவர்களை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை காெணாளியாகப் பதிவு செய்து மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது.
பல இடங்களிலும் இச்சம்பவம் தொடர்பாக போராட்டங்கள் வெடித்ததை அடுத்து, திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன், மணிவண்ணன் ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, இரண்டு ஆண்டுக்குப் பிறகு பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரன் பால் (29), பாபு என்கிற பைக்பாபு (27), அதிமுக பிரமுகர் அருளானந்தம் (34) ஆகி யோரை செவ்வாய்க்கிழமை இரவு சிபிஐ போலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அரு ளானந்தம் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, “தமிழகத்தை பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக அதிமுக அரசு சீரழித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
“அருளானந்தம் நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனால் வளர்க்கப்பட்டவர்.
“இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, தண்டனை வழங்கி, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்,” என்றும் சிபிஐ அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.