சென்னை: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி யில், இந்தியாவைப் பிரதிநிதித்து தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி என்ற தமிழ்ப் பெண் போட்டியிட உள்ளார்.
வாள்வீச்சு போட்டிக்கு தேர்வாகியுள்ள பவானி தேவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகள் கூறியுள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடியும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி வழி பவா னிக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், பவானி ேதவியால் தமிழ்நாடே பெருமை அடைவ தாகக் குறிப்பிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "கடின உழைப்புடன் இலக்கை அடைந்து மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழவேண்டும்," என நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
அண்மையில், பவானி தேவியை ஊக்குவிக்கும் வகையில் அவரது தாயாரிடம் ரூ.5 லட்சம் காசோலையை முதல்வர் வழங்கினார்.
இந்நிலையில், "தமிழக வீரர் பவானி தேவி, கடும் போராட்டங்க ளுக்கு இடையே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பவானியின் பயிற்சிக்காக அவரின் தாயார் தனது நகைகளை அட மானம் வைத்து செலவழித்துள்ளார். பவானி தேவி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்," என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
பிரதமரின் பேச்சு ஊக்கம் அளிப்பதாகத் தெரிவித்த பவானி தேவி, "எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி கட்டாயம் நாட்டை பெருமை அடையச்செய்வேன்," என்று கூறியுள்ளார்.