கலாஷேத்ரா பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தயார்

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.

அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

கடந்த மார்ச் மாதம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் இவ்விவகாரம் குறித்து பல்வேறு செய்திகளை வெளியிடட்ன.

ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அறுபது நாள் சிறை வாசத்துக்குப் பிறகு பிணையில் வெளிவந்த நிலையில், அவர் மீதான வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி மகளிர் காவல்துறை குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது என்றும்

ஓரிரு நாள்களில் அது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!