பயணச் சீட்டு இல்லாமல் சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்தவரிடம் விசாரணை

சென்னை: விமானப் பயணச் சீட்டு இல்லாமல், ஏழு அடுக்குப் பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த ஆடவர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக ஏழு அடுக்குப் பாதுகாப்பு முறை அமலில் உள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு இளைஞர் ஒருவர் விமானப் பயணச் சீட்டு, சிறப்பு அனுமதிச் சீட்டு எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமைச் சோதனை நடக்கும் பகுதிவரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.

இரவு 10 மணி அளவில் குடி யுரிமை அலுவலக முகப்புப் பகுதியில் ஊழியர் ஒருவரின் கைத்தொலைபேசியைத் திருட முயன்றுள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து அடித்த அதி காரிகள், விமான நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், மூன்று மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!