ஜி20 மாநாட்டுக்காக ரூ.10 கோடி மதிப்பில் 28 அடி உயர நடராஜர் சிலை

கும்பகோணம்: ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்பில் வைப்பதற்காக தமிழகத்தில் இருந்து 28 அடி உயரமுள்ள மாபெரும் நடராஜர் சிலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் சுவாமி மலை பகுதியில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டது.

ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமையேற்றுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் அந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டு அரங்கின் முகப்புப் பகுதியில் மாபெரும் நடராஜர் சிலையை அமைக்க, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.

இந்தச் சிலையை உருவாக்கும் பணி தமிழகத்தின் சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்துக்கு வழங்கப்பட்டது.

சிலை தயாரானதை அடுத்து வெள்ளிக்கிழமை அதை டெல்லிக்குக் கொண்டு சென்றனர். ஐந்து பொக்லைன் இயந்திரங்களின் துணையோடு மாபெரும் நடராஜர் சிலை லாரியில் ஏற்றப்பட்டது. வரும் 28ஆம் தேதி இச்சிலை டெல்லி சென்றடையும்.

முன்னதாக, சுவாமிமலையிலிருந்து புறப்பட்ட நடராஜர் சிலையை அப்பகுதி மக்கள் மலர்கள் தூவி வணங்கினர். 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்ட இச்சிலையின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!