பட்டாசு விபத்து: நான்கு வயதுச் சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை: தீபாவளியன்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை, மாம்பாக்கம் பகுதியில் வசித்து வரும், ரமேஷ் (28), அஸ்வினி (25) தம்பதியர்க்கு நான்கு வயதில் நவிஷ்கா என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

தீபாவளியன்று குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடியது இச்சிறிய குடும்பம்.

ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31 வயது) பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். அதைச் சிறுமி நவிஷ்கா வேடிக்கை பார்த்தாள். அப்போது விக்னேஷ் வெடித்த ஒரு பட்டாசு எதிர்பாராதவிதமாக சிறுமியின்மீது விழுந்து, அதன் பிறகு வெடித்துச் சிதறியது.

இதில் சிறுமி நவிஷ்காவின் மார்பு, கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குதூகலமாகத் தொடங்கிய கொண்டாட்டம் பெருஞ்சோகத்தில் முடிவடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!