ரூ.12 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: நைஜீரியர் கைது

சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கின.

இதுதொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த 30 வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்தடைந்த பயணிகள் அனைவரும் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சுற்றுலா விசாவில் வந்திருந்த ஆடவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தது.

எனினும், அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் திடீரென வயிறு வலித்ததாக அந்த ஆடவர் கூறியதை அடுத்து அதிகாரிகள் உஷாராகினர்.

‘எக்ஸ் ரே’ சோதனையின் மூலம் அவரது வயிற்றுக்குள் உருளை வடிவில் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது. பின்னர் நடந்த விசாரணையின்போது அவர் 71 போதை மாத்திரைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

அம்மாத்திரைகளுக்குள் கோக்கைன் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்து இருந்தார். அம்மாத்திரைகளின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூபாய் 12 கோடி என்றும் அவற்றின் எடை 1.2 கிலோவாக இருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!