திருத்தணி: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தேர்தல் சூமூகமாக நடந்தேற முக்கியப் பங்காற்றிய துணை ராணுவப்படையினருக்கு தமிழக காவல்துறை பிரியாணி விருந்து அளித்தது.
கடந்த ஒரு மாத காலமாக துணை ராணுவப்படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருத்தணி காவல்துறையினர் சார்பில் அங்கு பணியில் இருந்த துணை ராணுவப்படையினருக்கு இந்த விருந்து வழங்கப்பட்டது.
கோழிக்கறி வறுவல், குழம்பு, முட்டை மசாலா என பல்வேறு அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
விருந்து சிறப்பாக இருந்ததாக துணை ராணுவப்படையினர் தெரிவித்தனர்.
திருத்தணி காவல்துறையினரின் இந்தச் செயலைப் பாராட்டி சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.