டெல்லி மகளிர் ஆணைய ஊழியர்கள் 223 பேர் அதிரடி பணி நீக்கம்

டெல்லி: டெல்லி மகளிர் ஆணையத்தின் ஊழியர்கள் 223 பேரை அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடியாக நீக்கி உள்ளார்.

இதனால் ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக, நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. அவர் தற்போது ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

“ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என சுற்றறிக்கை ஒன்றில் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன 223 ஊழியர்கள் இத்தனை ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியல் காரணங்களுக்காகத்தான் மகளிர் ஆணைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!