சிங்க‌ப்பூர்

உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை மேம்படுத்தி, பொன்விழாக் கொண்டாட வைத்த நாட்டின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், 20 ஆண்டுகால தலைமைத்துவத்துக்குப் பிறகு திங்களன்று (மே 13) தமது பதவி விலகல் கடிதத்தை முறைப்படி அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் வழங்கினார்.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பூல்ஸ் அமைப்பின் இணைய சூதாட்டத்தளம், ஜாக்பாட் இயந்திர சூதாட்ட அறைகள் ஆகியவற்றிலிருந்து கூடுதல் வெளிநாட்டு ஊழியர்கள் சுய விலக்கு கோரியுள்ளனர்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிங்கப்பூரின் இரண்டு சொகுசுக் கப்பல் நிலையங்கள் வரும் ஆண்டுகளில் ஒன்றிணைக்கப்படும் என்று அண்மையில் வெளியான செய்தி உண்மையல்ல என்று நகரச் சீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் திங்கட்கிழமை (மே 13) தெரிவித்துள்ளன.
பழைய மாணவர்கள் மேற்படிப்பிற்குத் திரும்பிவர விரும்பினாலும் செலவுகளும் வேலை மற்றும் குடும்பக் கடப்பாடுகளும் அவர்களைத் தடுப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வு குறிப்பிட்டு இருந்தது.