இந்தியா

ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஜனவரி 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியினர் கோவில்களை கட்டியது போதும். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும். நாட்டில் பல இடங்களில் மிருகங்களைபோல் மக்கள் தகுதியற்ற இடங்களில் வாழ்கிறார்கள். அத்தகையோருக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆஞ்சனேயா கூறினார்.
அகமதாபாத்: குஜராத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்திலுள்ள ரான் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் ஜனவரி 1ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.