ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே துப்பாக்கித் தாக்குதலுக்கு பலி

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ‌ஷின்சோ அபே,67, மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் மரணம் அடைந்துள்ளார்.


ஜப்பானின் நாரா நகரில் அரசியல் கூட்டம் ஒன்றில் திரு அபே பேசிக்கொண்டிருந்தபோது ஒருவன் அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திரு அபேயின் மார்பில் குண்டுகள் பாய்ந்துள்ளது என நம்பப்படுகிறது. அவர் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவனுக்கு 40 வயது என்றும் தமக்கு திரு அபேயையும் அவரது கொள்கைகளையும் பிடிக்காததால் அவரைக் கொல்லத் திட்டமிட்டதாக அறியப்படுகிறது.


ஜப்பான் நாட்டில் கைதுப்பாக்கிகள் வைத்துக்கொள்வதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. இருப்பினும் இப்படி இரு சம்பவம் நிகழ்ந்திருப்பது ஜப்பானிய மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!