மலைப்பாம்பு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்; விசாரணை தொடர்கிறது

பூன் லே சந்தை, உணவங்காடி இருக்கும் பகுதியில் சில ஆடவர்கள் ஒரு மலைப்பாம்பைத் துன்புறுத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தக் காட்சி பதிவான காணொளி வெளியானதைத் தொடர்ந்து 'ஏக்கர்ஸ்' எனும் விலங்கு விவகார ஆய்வு, கல்விச் சங்கம் கூடுதல் தகவல் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சம்பவம் பதிவான காணொளியைப் பொதுமக்களில் ஒருவர்  தங்களுக்கு அனுப்பியதாக சங்கம் புதன்கிழமையன்று (19 ஏப்ரல்) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

காணொளி செவ்வாய்க்கிழமை (18 ஏப்ரல்) இரவு சங்கத்துக்கு அனுப்பப்பட்டது.

சரக்குக் கூடைகளைக் கொண்டு சிலர் மலைப்பாம்பைத் தாக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.

சுமார் இரண்டு மீட்டர் நீளம்கொண்ட அந்த மலைப்பாம்பு பின்னர் உணவுக்கடைக்கு அருகே கொண்டு செல்லப்பட்டது.

அதற்குப் பிறகு வேறோர் ஆடவர் அதைப் பெரிய கத்தியால் அடித்துக் கொன்றார்.

சம்பவம் நிகழும்போது அங்கிருந்த சிலர் சிரிப்பதும் உற்சாகமூட்டுவதும் காணொளியில் பதிவானது

இது குறித்த அனைத்து தகவல்களையும் விலங்கு விவகார ஆய்வு, கல்விச் சங்கம், தேசிய பூங்காக் கழகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!