இந்தோனீசிய நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 15 பேர் மரணம்: பேரிடர் அமைப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, சாலைகளும் சேதமுற்றதாக அந்நாட்டின் பேரிடர் அமைப்பு மே 4ஆம் தேதி கூறியது.

இந்தோனீசியாவில் மழைக்காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணி அளவில் தென் சுலாவேசியில் உள்ள ‘லுவு’ வட்டாரத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக இந்தோனீசியப் பேரிடர் மீட்பு அமைப்பின் பேச்சாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.

“தென் சுலாவேசி மாநிலத்தில் உள்ள ‘லுவு’ வட்டாரத்தில் நிலச்சரிவுகளாலும் வெள்ளத்தாலும் மொத்தம் 14 குடியிருப்பாளர்கள் உயிரிழந்தனர்,” என்றார் அவர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மோசமாகச் சேதமுற்றதாகவும், 42 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நான்கு சாலைகளும் ஒரு மேம்பாலமும் சேதமுற்றன.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல்களுக்கோ உறவினர்களின் வீடுகளுக்கோ இடம் மாற்றப்பட்டனர். 1,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!