விமான நிலைய மின்தூக்கியின் அடியில் பெண்ணின் சடலம்

இந்தோனீசியாவின் மேடான் நகரில் உள்ள கோலனாமு விமான நிலையத்தில் உள்ள மின்தூக்கியின் அடியில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அந்தப் பெண் ஏப்ரல் 24ஆம் தேதி மாண்டார், அவரின் உடல் மூன்று நாள்களுக்குப் (ஏப்ரல் 27) பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அய்சியா சிண்டா டேவி எனப்படும் அந்தப் பெண் மின்தூக்கியில் இருந்து கிழே விழும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

காணொளியில் அந்தப் பெண் இரு பக்கம் கதவுகள் உள்ள மின்தூக்கியில் ஏறுகிறார். தான் ஏறிய கதவு பக்கமே பார்த்து நிற்கும் அவர் கதவுகள் லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அதைத் தொடுகிறார்.

பின்னர் ஒரு அடி முன் சென்ற அவர், மின்தூக்கியில் இருந்து கீழ்ப்பகுதிக்குள் விழுந்தார். 

மின்தூக்கியில் இருந்து மோசமான வாடை வந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 

கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலம் மீட்கப்பட்டது. 

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!