பேங்காக்: தாய்லாந்தின் கிழக்கிலுள்ள ராயோங் மாநிலத்தில், வேதிப்பொருள் சேமிப்புத் தொட்டியில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
தீ மேலும் பரவலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் அருகிலுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்தச் சேமிப்பு வசதி, சியாம் சிமென்ட் குழுமத்தின் துணை நிறுவனத்திற்குச் சொந்தமானது.
தீ விபத்தை அடுத்து அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் நிலைமை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீப்பிடித்த தொட்டியில் ஒரு ‘ஹைட்ரோகார்பன்’ கரைப்பான் சேமிக்கப்பட்டு வந்தது என்றும் அந்த வேதிப்பொருள் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.