லண்டன் வாள்வீச்சுத் தாக்குதல்: 14 வயது மாணவன் உயிரிழப்பு தொடர்பில் சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் தலைநகரில் கிழக்கே ஹைனால்ட் பகுதியில் பள்ளியை நோக்கி நடந்து சென்ற டேனியல் அன்ஜோரின் என்பவர், சமுராய்-வகை வாள் போன்ற ஒன்றை வைத்திருந்த ஆடவரால் தாக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி உயிரிழந்தார்.

காவல்துறையினர் அந்த 36 வயது சந்தேக நபரை ‘டேசர்’ துப்பாக்கியால் சுட்ட பிறகு கைது செய்தனர்.

ஸ்பானிய-பிரேசிலிய நாட்டவரான அந்தச் சந்தேக நபரின் பெயர் மார்கஸ் ஒரேலியோ ஆர்டுயினி மோன்ஸோ என்றும் மே 2ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, உயிரிழந்த மாணவர் அன்ஜோரின் தமது படிப்பில் பாராட்டுதலுக்குரிய அர்ப்பணிப்பைக் காட்டியவர் என்று அவரது பள்ளி கூறியுள்ளது.

சந்தேக நபர் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான காயம் விளைவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டதை அடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!