பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 70க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. ஒருசில இடங்களை மீட்பு அதிகாரிகளும் அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் நாள்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் 497 நகர்களில் கிட்டத்தட்ட பாதி நகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
குறைந்தது 23,000 பேர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பல இடங்களில் தெருக்கள் ஆறுகளாக மாறிவிட்டன; சாலைகளும் பாலங்களும் அழிந்துவிட்டன.
நிலச்சரிவுகள், அணைக் கட்டமைப்பின் ஒரு பகுதி சேதம் என வேறு பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரியோ கிராண்ட் டூ சூல் மாநிலம் புவியியல்ரீதியாக அமைந்துள்ள இடம், கடும் மழையும் வறட்சியும் மாறி மாறிவரும் வானிலை முறையைக் கொண்டுள்ளது. இந்த வானிலை முறை, பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்துவருவதாக உள்ளூர் அறிவியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.