சிட்னி: சிட்னி புறநகரில் உள்ள கடற்கரையில் சுறா மீன் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். சிட்னியிலிருந்து ஆறு மணி நேரத் தொலைவில் உள்ள காஃப்ஸ் துறைமுகத்துக்கு அருகே எமரால்ட் கடற்கரையில் நீர்ச்சறுக்கில் ஈடுபட்ட இருபது வயதுகளில் இருந்த இளையரை சுறா மீன் தாக்கியது.
நேற்று காலை 11.00 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு ஹெலிகாப்டர் மருத்துவக் குழு உட்பட அவசர மீட்பாளர்கள் விரைந்தனர்.
நீர்ச்சறுக்கில் ஈடுபட்ட அந்த இளையரைக் காப்பாற்றும் பகீரத முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர். ஆனால் இளையரின் கை துண்டாடப்பட்டிருந்தது என்று நியூ சவுத் வேல்ஸின் அவசரவாகன ஊழியர் கூறினார்.
அந்த இளையரை உயிர்ப்பிக்கும் முயற்சி தோல்வியடைந்தது.
இது, ஆஸ்திரேலியாவில் நடந்துள்ள இரண்டாவது சுறா தாக்குதல் சம்பவமாகும் என்று ஆஸ்திரேலியா டரோங்கா இயற்கை பாதுகாப்பு அமைப்பு கூறியது.
கடந்த 2020ல் நடைெபற்ற 26 சுறா தாக்குதலில் எட்டுப் பேர் மாண்டனர்.