மட்ரிட்: ஸ்பெயினில் ஆடவர் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக நடந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
29 வயதான ஆடவர் வெலன்சியா நகரில் வெறும் காலணிகள் மட்டும் அணிந்து கொண்டு நடந்துள்ளார். தன்னுடைய கொள்கைகளைப் பின்பற்றி தான் நடப்பதால் அபராதம் விதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்பது அந்த ஆடவரின் வாதம்.
2020லிருந்து தான் ஆடைகள் இல்லாமல் பிறந்த மேனியாக பொது இடங்களுக்குச் செல்வதாக அவர் கூறுகிறார்.
ஸ்பெயினில் பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பதற்குச் சட்டப்படி அனுமதி உண்டு. 1988ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் கடற்கரைகளைத் தவிர மற்ற பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.