உணவகங்களில் புகைக்க தடை; எதிர்த்தவர்களுக்குத் தோல்வி

புத்ராஜெயா: மலேசிய உணவகங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக சுகாதார அமைச்சு விதித்த தடையை எதிர்த்து எழுவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிபதி ஸபாரியா முஹம்மது யூசோஃப் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் குழு அந்த ஒருமித்த முடிவை செவ்வாய்க்கிழமையன்று எடுத்தது.

1964ஆம் ஆண்டு நீதித்துறை ஆட்சிச் சட்டத்தின் 96ஆவது பிரிவின்கீழ் உள்ள தகுதிவிதிகளை நிறைவேற்றத் தவறியதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.

புகைப்பழக்கமுள்ள அந்த ஏழு பேரும் உணவகங்களில் புகைபிடிப்பதற்கு எதிரான தடையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

புகைபிடிப்பது குற்றச்செயலன்று என்றும் அது மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்றன்று என்றும் கூறிய அவர்கள், உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு எதிரான தடை நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் தெரிவித்திருந்தனர் .

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!