அதிர்ச்சி சம்பவம்: மாணவனைக் கடித்த ஆசிரியர்

பட்டர்வொர்த்: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவனைக் கடித்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது.

ஆசிரியர் கடித்ததால் அந்த மாணவன் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான்.

சமூக ஊடகத்தில் இதுகுறித்து வெளியான பதிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுவீ யிங் கூறினார்.

அத்தகைய குற்றச்சாட்டுகளை அமைச்சு கடுமையாக எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார். அது போன்ற சம்பவம் நடந்திருக்கவே கூடாது என்றார் அவர்.

தாயார் ஒருவர் தம்முடைய ஆறு வயது மகன் ஆசிரியரால் கடிக்கப்பட்டதாகக் கூறியதன் தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு திருவாட்டி லிம்மிடம் கேட்கப்பட்டது.

முதலில் தமது மகன் பகடிவதை செய்யப்பட்டதாகக் தாயார் நினைத்தார். ஆனால் ஆண் ஆசிரியர் ஒருவர், தமது மகனைக் கடித்ததாகப் பின்னர் அவருக்குத் தெரியவந்தது. இந்நிலையில் மற்ற மாணவர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

காவல்துறையினர் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!