கேமரன் மலையில் நடைப்பயணம் சென்ற இந்தியச் சுற்றுப்பயணியைக் காணவில்லை

ஈப்போ: கேமரன் மலைப் பகுதியின் குனுங் ஜசாரில் நடைப்பயணம் சென்றதாக நம்பப்படும் 44 வயது இந்தியச் சுற்றுப்பயணியை செப்டம்பர் 22 முதல் காணவில்லை என்று கேமரன் மலைப் பகுதியின் மாவட்டக் காவல்துறை தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

நந்தன் சுரே‌‌ஷ் நட்கர்னி என்ற அந்த ஆடவர், செப்டம்பர் 19ஆம் தேதி தானா ரத்தாவின் ஹைக்கர்ஸ் ஸ்லீப் போர்ட் தங்குவிடுதியில் அறையெடுத்துத் தங்கினார். அவர் செப்டம்பர் 24ஆம் தேதி கிளம்பி இருக்கவேண்டும்.

ஆனால், அவரைக் காணவில்லை என்று தங்குவிடுதியின் மேலாளர் செப்டம்பர் 25ஆம் தேதி காவல்துறையில் புகார் செய்தார்.

ஆடவர் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 9 மணிக்குத் தனியாக வெளியே சென்றதாகவும், அதன்பின்னர் திரும்பி வரவில்லை என்றும் தங்குவிடுதியின் கண்காணிப்பு கேமராக்கள் காட்டுகின்றன.

தானா ரத்தா சுற்றுவட்டாரத்திலிருந்த கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்ததில், அவர் குனுங் ஜசாரின் பத்தாம் பாதையில் நடைப்பயணம் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டிருப்பதாக டிஎஸ்பி ரம்லி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!