ஸ்காட்லாந்தில் சீக்கியக் கோயிலுக்குள் செல்ல இந்தியத் தூதருக்குத் தடை

லண்டன்: பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு சீக்கிய கோயிலுக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அவர் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீக்கிய தீவிரவாதி கொலை தொடர்பில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ள நிலையில் புதிதாக இந்தப் பிரச்சினை தலை எடுத்துள்ளது.

ஸ்காட்லாந்து சம்பவம் தொடர்பில் இன்ஸ்டகிராமில் ‘பிரிட்டன் இளம் சீக்கியர்’ என்ற அமைப்பு காணொளி ஒன்றைப் பதிவேற்றியது.

அந்தக் கோயிலுக்குள் செல்ல முயன்ற தூதரை, ஆடவர் ஒருவர் தடுத்து நிறுத்தியதைக் காணொளி காட்டியது. அந்த ஆடவர் காலிஸ்தான் ஆதரவாளர் என்று இந்திய அரசு தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

“கனடாவிலும் இதர இடங்களிலும் அவர்கள் சீக்கியர்களைத் துன்பப்படுத்துகிறார்கள்.

“நாங்கள் இங்கு செய்ததைப் போலவே ஒவ்வொரு சீக்கியரும் எந்த ஓர் இந்தியத் தூதருக்கும் எதிராக செயல்பட வேண்டும்,” என்று காணொளியில் ஒரு குரல் ஒலித்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு, காவல்துறையிடம் இந்தியா கொண்டு சென்று அது பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!