சோல்: மத்திய கிழக்கில் காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றின் மீது அக்டோபர் 17ஆம் தேதி இஸ்ரேல் குண்டு போட்டு தாக்கியது. இதன் மூலம் இஸ்ரேல் போர் குற்றம் செய்துள்ளது.
இஸ்ரேலின் அந்தச் செயலுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு கொடுத்தது என்று வடகொரியாவின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை புகார் தெரிவித்தது.
“விமானந்தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பெரும் படைபலத்தை மத்திய கிழக்கில் அமெரிக்கா குவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் ராணுவ ஆதரவையும் வழங்குகிறது.
“கொஞ்சம்கூட கவலையின்றி அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்ய அமெரிக்கா பச்சைக்கொடி காட்டி இருக்கிறது என்று ராணுவப் பேச்சாளர் கூறியதாக அரசாங்க கேசிஎன்ஏ செய்தி ஊடகம் தெரிவித்தது.
“இவற்றை வைத்துப் பார்க்கையில் இஸ்ரேல் அரங்கேற்றும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என்பது தெரியவருகிறது,” என்று அந்தப் பேச்சாளர் அமெரிக்காவை சாடினார்.
இப்படி புகார் கூறிய வடகொரிய அமைச்சு, அதற்கான ஆதாரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.