வடகொரியா: இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலைக்கு அமெரிக்கா உடந்தை

சோல்: மத்திய கிழக்கில் காஸாவில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றின் மீது அக்டோபர் 17ஆம் தேதி இஸ்ரேல் குண்டு போட்டு தாக்கியது. இதன் மூலம் இஸ்ரேல் போர் குற்றம் செய்துள்ளது.

இஸ்ரேலின் அந்தச் செயலுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு கொடுத்தது என்று வடகொரியாவின் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை புகார் தெரிவித்தது.

“விமானந்தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பெரும் படைபலத்தை மத்திய கிழக்கில் அமெரிக்கா குவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் ராணுவ ஆதரவையும் வழங்குகிறது.

“கொஞ்சம்கூட கவலையின்றி அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்ய அமெரிக்கா பச்சைக்கொடி காட்டி இருக்கிறது என்று ராணுவப் பேச்சாளர் கூறியதாக அரசாங்க கேசிஎன்ஏ செய்தி ஊடகம் தெரிவித்தது.

“இவற்றை வைத்துப் பார்க்கையில் இஸ்ரேல் அரங்கேற்றும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது என்பது தெரியவருகிறது,” என்று அந்தப் பேச்சாளர் அமெரிக்காவை சாடினார்.

இப்படி புகார் கூறிய வடகொரிய அமைச்சு, அதற்கான ஆதாரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!