ஹிஜாப் விதிமுறை மீறல்:ஈரானியப் பெண் மரணம்

தெஹ்ரான்: மெட்ரோ ரயிலில் நடந்த தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் இருந்த 16 வயதான ஈரானிய இளையர் அர்மிதா காராவாண்ட், சனிக்கிழமையன்று (அக்.28) மரணம் அடைந்தார். 28 நாட்கள் தீவிர சிகிச்சை செய்தும் பலனின்றி அப்பெண் இறந்துவிட்டார் என்று, ஈரானியக் குடியரசின் இளையர் அமைச்சைச் சார்ந்த பொர்னா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் அதிகார அமைப்புகள் அவரை மற்ற பயணிகள் தாக்கவில்லை என்றும் ரத்த அழுத்தக் குறைவால் ரயிலில் மயங்கி விழுந்தார் எனவும் கூறியிருந்தனர்.

குர்திய இனத்தவரான அர்மிதா, ‘ஹிஜாப்’ எனப்படும் பெண்கள் அணியும் தலையங்கி விதிமுறையை மீறியதால் ஈரானின் அறநெறிப் பிரிவின் அதிகாரிகளால் தாக்கப்பட்டார் என்று குர்திய வலதுசாரி அமைப்பான ஹெங்கா கடந்த அக்.3 அன்று செய்தி ஒன்றில் அறிவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 22 வயது மாஹ்சா அமினி என்ற பெண், இதேபோன்று ஹிஜாப் விதிமீறல் குற்றத்துக்குப் பிறகு தடுத்துவைக்கப்பட்டிருந்து கோமா நிலையில் மரணம் அடைந்தார். அந்நிகழ்வுக்குப் பிறகு ஈரானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!