தொடர் மழையால் ஜோகூர் பாருவில் 11 இடங்களில் வெள்ளப்பெருக்கு

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் வியாழக்கிழமை (டிசம்பர் 14) மாலை 4 மணியிலிருந்து கனத்த மழை பெய்ததால் 11 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதுகுறித்து மாலை 4.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜோகூர் பாரு நகர அமைப்பு கூறியது.

தாமான் சிட்டியாவின் இரு பகுதிகள், ஜாலான் ரோஸ்மேரா, ஜாலான் முகமது அமின் 7 போன்ற இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எம்பிஜெபி என்ற மின்னல் படை அனுப்பப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

ஜாலான் பெர்சியரன் மோலெக் உத்தாமாவில் இரண்டு கார்கள் வெள்ளத்தில் சிக்கியதாக மாலை 4.38 அளவில் தகவல் கிடைத்ததாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.

சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பாளர்களுடன் ஒரு தீயணையணைப்பு வாகனமும் ஓர் அவசர மருத்துவ மீட்புச் சேவை வாகனமும் அனுப்பப்பட்டன. கார் ஓட்டுநர்கள் இருவர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!