‘கொவிட்-19 அதிகரித்தாலும் மலேசியாவில் முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் விதிக்க எண்ணமில்லை’

பீதியடைய வேண்டாம், அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்: சுகாதார அமைச்சர்

புத்ரா ஜெயா: மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும், முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது டிசம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார்.

மலேசியாவில் மளமளவென அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்பால் கவலை எழுந்துள்ளது.

கொவிட்-19 பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது நடைமுறைப்படுத்தபட்ட கட்டுப்பாடுகளை விதிக்காமல் இம்முறை நிலைமையை மலேசியாவால் சமாளிக்க முடியும் என்று டாக்டர் ஸுல்கிஃப்லி நம்பிக்கை தெரிவித்தார்.

டிசம்பர் 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் 20,696 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.

டிசம்பர் 3ஆம் தேதிக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் 12,757 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. 11 பேர் மாண்டனர்.

அண்மைய கிருமித்தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு ஐந்து முனை உத்தியைத் தயாரித்துள்ளதாக அமைச்சர் ஸுல்கிஃப்லி கூறினார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை முன்கூட்டியே அடையாளம் காணும் தளங்களும் அவற்றில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!