சிலி காட்டுத் தீ: மரண எண்ணிக்கை 46ஆக உயர்ந்தது

சான்டியாகோ: சிலியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயின் காரணமாக மாண்டோரின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் கேப்ரியல் பொரிச் தெரிவித்துள்ளார்.

மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சிலியின் வால்பராய்சோ பகுதியில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

தீயணைப்புப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.

வால்பராய்சோ பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடலோர நகரமான வினா டெல் மார், காட்டுத் தீயில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய மீட்பு பணியினர் சிரமப்படுவதாக சிலி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயில் கருகி 40 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் ஆறு பேர் தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாண்டதாகவும் அதிபர் பொரிச் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இதுவே சிலியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீ என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு கூறியது.

சிலியில் ஒரே நேரத்தில் 92 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக 43,000க்கும் அதிகமான ஹெக்டர் பரப்பளவு நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலியின் உள்துறை அமைச்சர் கெரோலினா டொஹா கூறினார்.

பிப்ரவரி 2ஆம் தேதிக்கும் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அதிக அளவிலான இடங்கள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!