பிளிங்கனின் சவூதி பயணம்; நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்

தோஹா: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சவூதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிப்ரவரி 5ஆம் தேதியன்று சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது சல்மானை அவர் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது.

ரஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமைச்சர் பிளிங்கனின் சவூதி பயணம் போர் நிறுத்தத்தைப் பெற்றுத் தரும் என்று பாலஸ்தீனர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி அமைச்சர் பிளிங்கனும் சவூதி பட்டத்து இளவரசரும் கலந்துரையாடியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பிறகு ஹோட்டலுக்குத் திரும்பிய அமைச்சர் பிளிங்கன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

போர் நிறுத்தத்துக்கு இணங்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகள் கடந்த வாரம் அழைப்பு விடுத்தனர்.

இதுதொடர்பாக, ஹமாஸ் அமைப்பின் பதிலுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

போர் நிச்சயமாக நிறுத்தப்படும் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!