சான்ஃபிரான்சிஸ்கோ: கலிஃபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
கிங் சிட்டி குடியிருப்பு வட்டாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்த மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு பெண் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
காயம் அடைந்த மூன்று ஆண்கள் சலினாசில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கிங் சிட்டி காவல்துறை மின் அஞ்சலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஒரு வாகனத்திலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியது.