ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானை இன்று (மார்ச் 19) காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகே ஏற்பட்டதால், இரு நாடுகளும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

130 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டாரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!