கோலாலம்பூர் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1ல், ஏப்ரல் 14ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.

இதில் மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதை ஒரு கொலை முயற்சியாக மலேசியக் காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 14 அதிகாலை 1.30 மணி அளவில் கோலாலம்பூருக்குள் வரும் பயணிகளுக்கான வருகைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.

ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் இருமுறை சுட்டார். ஒருவருக்கு மெய்க்காப்பாளராகப் பணியாற்றும் ஆடவர் மீது குண்டு ஒன்று துளைத்தது. சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். தமது மனைவிக்கு அந்த ஆடவர் குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மெய்க்காப்பாளர் படுகாயம் அடைந்துள்ளார்.

“இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல. இது தனிப்பட்ட விவகாரம் காரணமாக நிகழ்ந்துள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் பாதுகாப்பாக உள்ளது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது,” என்று திரு உசேன் உமர் கூறினார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!