போதைப்பொருள் தொடர்பான அதிரடிச் சோதனையில் அரசு ஊழியர்கள் உட்பட 30 சந்தேக நபர்கள் சிக்கினர்

ஜோகூர் பாரு: பத்து பகாட்டின் உல்லாச விடுதி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 11 அரசு ஊழியர்கள் உட்பட போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இயங்கவேண்டிய நேரத்தையும் தாண்டி அவ்விடுதி செயல்பட்டு வந்ததை அடுத்து காவல்துறையினர் அங்கிருந்த மொத்தம் 49 வாடிக்கையாளர்களைச் சோதனையிட்டனர்.

கைதான 30 சந்தேக நபர்களில் 17 வயது இளைஞர் ஒருவரும் இருந்ததாக ஜோகூர் தலைமைக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார். அந்த 17 வயது இளைஞனைச் சோதித்துப் பார்த்ததில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

அத்துடன் ஆறு வெளிநாட்டவரும் கைதானவர்களில் அடங்குவர்.

இதற்கிடையே, உல்லாச விடுதியின் 29 வயது பராமரிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட அரசாங்க ஊழியர்களை உள்ளடக்கிய அந்தச் சந்தேக நபர்களுக்கு எதிராகக் காவல்துறை நான்கு நாள் தடுப்புக்காவல் ஆணையைப் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!