அரசகுலத்தை அவமதித்தவருக்குக் கூடுதல் சிறைத்தண்டனை

பேங்காக்: தாய்லாந்தில் 2021ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மனித உரிமை ஆர்வலர் அர்னோன் நம்ப்பாவிற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 29) மேலும் ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசகுலத்தை அவமதித்ததன் தொடர்பில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதாகும் அர்னோனுக்கு ஈராண்டு 20 நாள்கள் சிறைத்தண்டனையுடன் 100 பாட் (S$2.70) அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசகுல அவமதிப்பு, நெருக்கடிநிலை அறிவிப்பை மீறியது, 2021ல் அரசியல் பேரணியில் உரையாற்றியது ஆகியவற்றுக்காக இத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக அர்னோனின் வழக்கறிஞர் கூறினார்.

தான் தவறேதும் செய்யவில்லை என்று அர்னோன் மறுத்துள்ளதாகக் கூறிய அவர், மேல்முறையீடு விண்ணப்பம் செய்யப்படும் என்று கூறினார்.

ஏற்கெனவே அர்னோனுக்கு அரசகுல அவமதிப்பு தொடர்பான இரண்டு குற்றங்களுக்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்திலிருந்து அவர் சிறையில் உள்ளார்.

அதைத் தொடர்ந்து அண்மையில் விதிக்கப்பட்ட தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், அர்னோன் மொத்தம் 10 ஆண்டுகள் 20 நாள்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.

தாய்லாந்துச் சட்டத்தின்கீழ், மன்னரை அவமதித்ததாக நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!