மேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ; வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

சிட்னி: மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 10 வீடுகள் அழிந்தன. பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வியாழக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க ஆஸ்திரேலியத் தீயணைப்பு வீரர்கள் போராடினர். தீயணைப்புச் சேவைகள் அவசரகால எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

முடிந்தால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

விமானங்களின் ஆதரவோடு 500க்கும் மேற்பட்ட அவசரகால ஊழியர்கள் கட்டுக்கடங்காத தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயில் 10 வீடுகள், நான்கு கொட்டகைகள், சில வாகனங்கள் ஆகியவை அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வெப்பநிலை பகல்நேரத்தில் 40 டிகிரி செல்சியசை எட்டும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் புகை நிரம்பிய சாலைகளைக் கடக்க சிரமப்பட்டதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.

தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிய குழந்தைகள் உள்ளிட்ட 130 பேர் மீட்பு நிலையத்தில் இரவு முழுதும் தங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சில நாள்கள் எடுக்கும் என்று தீயணைப்பு, அவசரகால சேவைகள் பிரிவுத் தலைவர் டேரன் கிலேம் கூறினார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் 65 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

ஆஸ்திரேலியாவின் இளவேனிற்கால வெப்ப அலையால் பெர்த் நகரம் முழுதும் காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!