வான்குடை சாகசத்தில் ஈடுபட்ட 87 வயது மாது

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலம், ரானாவ் நகரில், வான்குடையூர்தியைச் (பேராகிளைடிங்) செலுத்தும் பணியில் இருக்கும் கிறிஸ் லெம்மர்ட் என்பவர், ஜூலை 17ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது எப்போதும்போல் இளையர்கள் கூடியிருப்பார்கள் என எதிர்பார்த்தார்.

‘பேராகிளைடிங்’ சாகச நடவடிக்கையில் அதனைச் செலுத்துபவரும் பயணி ஒருவரும் இருப்பர்.

அதனால், இளையர்களுக்குப் பதிலாக 87 வயது மாதைக் கண்டதும் அவர் வியப்படைந்தார்.

திருவாட்டி தொங், ஐம்பது வயது மதிக்கத்தக்க தன் மகளை ஊக்கப்படுத்துவதற்காகத் தான் முதலில் வான்குடையூர்தியில் செல்ல முன்வந்தார்.

இதன் தொடர்பில் திரு லெம்மர்ட் தமது சமூக ஊடகப் பக்கத்தில் இரண்டு காணொளிகளை வெளியிட்டார். அவற்றைப் பற்றி இணையத்தில் கருத்து தெரிவித்த சிலர் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அந்த மாதின் துணிவைப் பாராட்டினர்.

திருவாட்டி தொங் வான்குடையூர்தியில் பறந்துகொண்டிருந்தபோது பதற்றமின்றி இருந்ததாகத் திரு லெம்மர்ட் கூறினார்.

ரானாவில் 2014ஆம் ஆண்டில் வான்குடையூர்தி நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன் வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள், 10 விழுக்காட்டினர் பிள்ளைகள், எஞ்சியுள்ள 10 விழுக்காட்டினர் ஆண்கள் என்று திரு லெம்மர்ட் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!