பெரும் பாறாங்கல் ஒன்று வீட்டுக்குள் விழுந்து உள்ளிருந்தவற்றை நொறுக்க, பெண் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பினார்.
ஹவாயி தீவின் பாவ்லோ பள்ளத்தாக்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
வீட்டின் வசிப்பறையில் அந்தப் பெண் நடந்துகொண்டிருப்பதை அக்காணொளி காட்டுகிறது. அப்போது, திடீரெனப் பேரோசையுடன் பெரும் பாறாங்கல் ஒன்று சுவரை உடைத்துக்கொண்டு வீட்டினுள் விழுந்து, நொறுக்கித் தள்ளியது.
சில அடி தூரம் தள்ளி இருந்ததால் அப்பெண் உயிர்பிழைத்தார்.
மேக்ஸ் ரோட்ரிகெஸ் எனும் செய்தியாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் அக்காணொளியைப் பதிவிட்டுள்ளார். மில்லியன் பேருக்குமேல் பார்க்கப்பட்ட இக்காணொளி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்தப் பாறாங்கல் எங்கிருந்து விழுந்தது என்பது தெரியவில்லை.