இயக்குநர்களுக்கு படப்பிடிப்பில் நயன்தாரா குடைச்சல் கொடுப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழில் நயன்தாராவிற்கு சில படங்களே உள்ள நிலையில், ஜெய்யுடன் நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அன்னபூரணி’ உள்ளிட்ட சில படங்களே நயன்தாரா கைவசம் உள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர்களுக்கு இவர் அதிகமான குடைச்சல் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை 11 மணிக்கு வந்தால் 5 மணிவரை மட்டுமேநடிப்பேன் என்று கூறுவதாகவும் முன்னதாகவே வீட்டிற்கு செல்லும் பரபரப்புடன் நயன்தாரா காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக உள்ள நயன்தாராவின் தவிப்பைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் நடிப்பைத் தொழிலாகக் கொண்டு பல கோடிகளைச் சம்பளமாகப் பெறும் அவர், அதற்கேற்ப படக்குழுவினர்கள் கேட்பதுபோல அதிகமான காட்சிகளைப் படமாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றே இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் விரும்புவார்கள்.
ஆனால் நயன்தாரா குறிப்பிட்ட நேரம்தான் நடிப்பேன் என்று நெருக்கடி கொடுப்பது தற்போது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.