தனியார் விமானத்தில் மேற்கொண்ட பயணம் தமக்கு கசப்பான அனுபவத்தைத் தந்துள்ளதாகச் சொல்கிறார் மாளவிகா மோகனன். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், அண்மையில் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தாம் பயணம் செய்தபோது, விமானப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அந்நிறுவனத்தின் சேவை மிகவும் மோசமாக இருந்ததாகவும் மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.