ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் பின்னணிக் குரல் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள நடிகை மாளவிகா மோகனன், படத் தயாரிப்பின் மிகப் பயங்கரமான பகுதி என்றால் அது பின்னணிக் குரல் பதிவு (டப்பிங்) பணிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது யாராவது தனது கைகளைப் பற்றிக்கொள்ள முடியுமா?” என்றும் கேட்டுள்ளார்.
‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் பார்வதி, பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.